நிலவன் எழுதியவை | மார்ச்27, 2009

விடிவு தோன்றுமா?

விடிவு தோன்றுமா? சண்டைகள் சாய்ந்து சச்சர வோய்ந்து சமத்துவம் என்றுவரும் – வெடிக்

குண்டுகள் ஓசை, கொலை வெறிப் பேச்சு கேளா நாள்வருமா?

சிரிப்பினை மறந்து இருந்திடும் சனங்கள் சிரித்திட வழிவருமா – உடல்

தெருநடு வீதி தனில்விழும் அந்த ஓருநிலை மாறிடுமா?

மக்களை மக்கள் மதித்திடும் நிலைதான் மண்ணில் வந்திடுமா? – மொழிச்

சிக்கல்கள் ஓய்ந்து செம்மைகள் காணச் செகத்தில் நாள் வருமா?

அடக்கு முறையும் அசுரத் தனமும் அடியோடு ஓடிடுமா? – இனி

நடக்கும் காலம் தனிலே தானும் நன்மை கூடிடுமா?

அடிமை விலங்கு அனைத்தும் தகர்ந்து அகிம்சை நிலை பெறுமா? – புவி

விடிவு என்று புலரும் பொழுதை விரைவில் ஏற்றிடுமா?


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

வகைகள்

Follow

Get every new post delivered to your Inbox.