நிலவன் எழுதியவை | ஆகஸ்ட்15, 2010

நீரும் நீயும்

நீருக்கு நிறமில்லையென்பதெல்லாம் பூக்களைப் பார்க்காதவர்கள் சொல்லி வைத்தப் பொய்கள்.

ரோஜாவுக்கு ஊற்றிய நீர் சிவப்பாய் மல்லிகைக்கு ஊற்றிய நீர் வெள்ளையாய் நீரும் பூக்குமடி!

————————————————————————————————————————————-

பூக்களெல்லாம் பெண்களாம்.

வண்டுகள் எல்லாம் ஆண்களாம்.

எந்த மூடன் சொன்னது?

வண்டு பெண் உட்காரும் பூ ஆண் பூவாய் இருக்கலாமே!

பறிக்கப் போகிறாய் என்று தெரிந்தாலும் எப்படி சிரிக்க முடிகிறது இந்தப் பூக்களால்?

பறித்தப் பிறகும் நீ சூடும் போது மட்டும் மறுபடி ஒருமுறை பூக்கிறதே எப்படி?

வாடாமலே இருந்து விட்டால் பூவுக்கும் உனக்கும் பெரிய வித்தியாசமில்லை!

இதழ் திறந்தால் இரண்டிலும் தேன் தான்!

நீயிருக்கும்போது என்ன வரம் பெற்று காதலின் சின்னமானதோ ரோஜா!

ஒருவேளை முட்கள் அதிகம் இருக்கிற சாபத்தாலா?

நிலவன் எழுதியவை | ஆகஸ்ட்4, 2010

பெண்

பெண்மனது இனிதாம், தேரியாது எனக்கு…
பெண்பேச்சு கிளியாம் பார்க்கவில்லை இன்னம்…
பெண்ணிருந்தால் சோகமும் இருக்காதாம் புரியவில்லை எனக்கு…

வெல்லும்வரை வானில் தெரியாத சந்திரன்..
வென்றபின்பும் நிலையாக இருப்பதில்லை…
28நாள்தான் அவன் வாழ்நாளாம்… அவள் உயிர்கொண்ட நாளுமதுவாம்…
ஓ அதனாற்தான் பெண்ணையும் நிலவென்பார்களோ???

என்றென்றும் புதிராய் உதிக்கும் சிந்தனைகள்…
சித்தன்று இல்லை… சிறுபாம்பு நானில்லை…
பொத்தென்று விழுதுள்ளேன்…
பொசுக்கிவிட்டு நடக்கின்றேன்…
நம்முயிர்கள் சாகும்போது என் துன்பம் பெரிதில்லை…
பேடுகள் கூவி காலையும் விடியும்… காத்திருப்போம்…

கண்களில் வடியும் கண்ணீரை அதை துடைத்த கைகள் தான் தெரியும்,
சோகம் ஒருவனை வருடமாய் வாட்டலாம் ஆனால் வருடங்களாக இல்லை,
தமிழிழே ஓர் பற்று, பித்தெண்டு கூடக்கொள்ளலாம்,
தொலைதூர நெடுவானில் பரந்த எம் தேசம்
கொலைகாரப்பாவியரால் சிவந்தது தானேனோ?
கொன்றொழித்த தொடர்செயல்கள் தொடரும்போததனில்
வந்த பாவியரோ வழக்கொழிந்து போய்விடாதிருக்க
கொண்ட கோலமென்று எம் உறவுகள் தான் தவித்திருக்க
உண்டென்று சொல்லி புது உறவைத் தான் வளர்த்து
வென்றிங்கு பார்ப்போம் என்றுரைக்க நா தழுதழுத்து
கொன்றங்கு போட்ட நம் சொந்தங்கள் மீதினில் சத்தியம் செய்கின்றான்
உன்னருமை நண்பன் தேசத்தின் இரகசியம் காத்திடவே எண்ணி
தன்னுயிரை தேச மானிடத்தில் போற்றி அவன் தன்னுயிரை மாய்த்தானே
அத் தியாகியின் பேரிடரால் வந்தது தொல்வினை

நிலவன் எழுதியவை | ஆகஸ்ட்4, 2010

பெண்ணினத்தால் விடுதலை

கண்ணிரண்டில் காயமில்லை,
காது ரண்டும் ஓயவில்லை,
பெண்ணினமோ தூங்கவில்லை,
பொறுமையேதும் இழக்கவில்லை…

நம் உறவுகள் சாயாது,
சாய்ந்த உடலங்கள் வேகாது,
வேகும் தமிழினம் ஓயாது
ஓயும் அவலங்கள் மறைந்தாலும்
மறையும் வடுக்களும் மாறாது
மாறும் மாறும் உலகத்தின் தெளிவினால்
தெளியும் ஈழமும் தோன்றாமற்போகாது….

வர்ணனைக் காய்ச்சல் வேப்பமரத்தடியில்…
வாசமிகு பாய்ச்சல் நம் வேங்கைகள்மடியில்…

நிலவன் எழுதியவை | ஆகஸ்ட்4, 2010

இரத்ததுளி வீழ்ந்து இலங்கையானதோ???

அன்றே ஆண்டவன் படைத்தான் ஒரு பூமி…
எல்லோரும் சொன்னார்கள் அது நீர்த்துளி வடிவம் என்று…
மடையரே அன்று ஆண்டவனே படைக்கும் போது அவன் இரத்ததின் சிறுதுளி வீழ்ந்துதான் இலங்கையானதோ?
எம் சொந்தங்கள் மீதினில் சபதம் எடுக்கின்றோம்…
எம் விதைக்கப்பட்ட கல்லறைகள் மீது சத்தியம் செய்கின்றோம்…
வாழும்வரை தமிழனாக வாழ்வோம்…
சாகும்போதினில் தமிழனாக சாவோம்…
எதிரி பிடரியில் அடிக்க அடிவாங்கும் கூட்டமல்ல நாம்…
நெஞ்சிலே வாள் ஏறினாலும் நெஞ்சு நிமிர்த்தி சாகும் உன்னதக்கூட்டம்…

நிலவன் எழுதியவை | ஆகஸ்ட்4, 2010

பாசம்

சேற்றிலே செந்தாமரை மலர்ந்தாலும்,
சோம்பியதில்லைக் காலையில்.
மற்றவை எல்லாம் அரசன் சூரியன் என்று நினைக்க
அல்லிமட்டும் சந்திரனைக்காதலிக்குமே!
அது பாசத்தினால் வந்த உறவா?

நிலவன் எழுதியவை | ஆகஸ்ட்4, 2010

இருவரிக்கவிதை

கண்ணீர்
சமைக்கும்போது உப்பே போடுவதில்லை ஆனாலும் உப்புக்கரிக்கின்றதே!

சோகம்
இன்பத்தில் வாய்விட்டுச்சிரித்தாலும் உள்நெஞ்சு சிரிக்கலையே!!

கனவு
கவிழும் கப்பலும் இரவின் விடியலும்

ஏக்கம்
உணர்வுகளைக்கொட்டிட தவிக்கும் ஓர் உற்றதுணை

இலட்சியம்
வான்முட்டவேண்டும், மழலைமொழிபேசி பெண்மை முகில் முட்டவேண்டும்

வாழ்க்கை
சோகத்திலும், இன்பத்திலும், அழுகையிலும் துன்பத்திலும் முட்டிமோதி ஓடும் நாட்கள்

நண்பன்
இருந்தவர்கள் காற்றிலே, இப்போதோ என் மெட்டிலேமட்டும்

என்னவென்று சொல்ல, எழுதிட வார்த்தையில்லை,
கண்ணாவென்றழைக்க கருணைமொழி யாதுமில்லை,

நிலவன் எழுதியவை | ஜூலை14, 2010

நட்பு

நட்பு என்பது வெறும் மூன்றெழுத்துக்களல்ல…
நாலாயிரம் வார்த்தைகள்கோர்க்கப்பட்டு,
4 கோடி சொற்களாலும் வர்ணிக்க முடியாதது என்பது நட்புஎன்பதை மீண்டும் ஓர்தடவை
உணர்ந்துகொண்டேன்

துன்பத்திற் தோள்கொடுக்கும் நட்பிற்கிடையில்…
நம் துன்பத்தையே தம் துன்பமாக தாங்கும் நட்பு மேல்….
என் நண்பர்கள் என் துன்பத்தை தமக்காக சுமந்தவர்கள்….
என்பதனை பிந்தியே உணர்ந்துகொண்டேன்…

1000 முறை சூரியன் எரியட்டும்….
என்வீட்டு முற்றத்தில் வீழும் ஒளி எனக்கு மட்டும் சொந்தமல்ல….

வாழ்வின் வலிகள் பொறுப்பவர்கள் பெண்கள் என்பதை என்னவென்று சொல்வேன்….
என் அன்னை எனக்காக உணவாக்குகையில் தன்னை வருத்திக்கொள்வதையா?
எனக்கு அடித்துவிட்டு தான் அழுகையிலா….

வாழ்வின் வலி என்பதை பிந்தியே உணர்ந்துகொண்டேன்…
ஆனால் வாழ்வே வலியானவர்களுக்கு எதை நான் சொல்வேன்….

நிலவன் எழுதியவை | ஜூலை13, 2010

அன்னை

பெரும் சுமையாக நீ தாங்கி – என்னை
பெற்றெடுத்து இப் பூமியிலே – உன்
பொற்கரங்கள் தான் நீட்டி
பொரிமா எனக்கு ஊட்டினாயே!

கல்வி நான் கற்கையிலே – நீ
கண்விழித்துக் காத்திருப்பாய்
கல்லொன்று காலில் அடித்தாலும் – நீ
கண்கலங்கி காயத்திற்கு கட்டிடுவாய் . . .

மஞ்சிகன் முடி வெட்டுகையில் – உன்
மடி மீதுதான் என்னை வைத்திருப்பாய்
மஞ்சுனைக் கரம் நீட்டி – உந்தன்
மதலை என்னை அணைத்திடுவாய்…

கண்ணிமையில் தாங்கி – என்னை
காப்பாற்றி வளர்த்தவளே!
காததூரம் நான் சென்றேன் – என்
காதருகில் நீ சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும்

இன்னமும் இனிக்கின்றதே ! – நான்
இன்னலுறும் போதினிலே – நீ
இடியாக உடைந்து போவாய் !!
இன்னமும் இருக்கின்றது – சொல்வதற்கு. . .

ஒரு வார்த்தையில்லை – தாயே!
ஒற்றுமைக்காய் உவமிக்க
ஒருபோதும் முடியவில்லை – ஏன்
ஒரு வார்த்தைதான் தமிழிலில்லை . . .

உன்னருகில் இருக்கையில் – எனக்கு
உன்னருமை தெரியவில்லை
உன்னிப்பாய் என்னைப் பார்த்திருந்த
உன் உறுதுணையும் எனக்கிப்போதில்லை . . .

இதலைக் கொடியுறவு – எனக்கு
இதுவரையும் இருக்கிறதே!
இந்திரை உனை – நான்
இனி எப்போது பார்ப்பேனோ???

இதலை – கொப்பூழ்
இந்திரை – இலக்குமி
மதலை – குழந்தை
மஞ்சுனம் – மிருதுவான் / மென்மையான
மஞ்சிகன் – நாவிதன் / சிகை அலங்கரிப்பவர்

முல்லை மண்ணும் சிவக்குதோ?

முக்கனிப் மரங்களும் இறக்குதோ? 

பிஞ்சுக்குழந்தையும் கருகுதோ? 

இங்கே முப்பதாயிரம்தான் சாகுமோ? 

 

எத்தனை தடவைகள் ஏந்தினோம் கைகளை

எட்டி உதைக்கவே செய்தனர் சர்வதேசம் 

வெட்டுண்டு கிடக்கும் உடலங்கள் மீதினில்

வெடிமருந்துதான் மணக்குதோ?

 

கண் கட்டியிருந்து உயிர் வெட்டியிருந்து

பாடையிலேறேல்ல, பல்லாக்கில் செல்லேல்ல

படுத்த இடத்திலே வெட்டிப் புதையுது எம் சொந்தங்கள்

 

வயிற்றிலே குழந்தைகள் 

வாயிலே ஒருவேளைக் கஞ்சிக்கு ஏக்கங்கள் 

கொட்டும் மழையிலே 

ஒதுங்க இடமின்றி வெட்டிடும் மின்னல்கள் 

கண் கொட்டியே போயிடும் துண்டாகப் பறந்திடும் 

செல்களின் தூறல்கள் 

 

பாடசாலைகள் மறந்து வருசமாச்சு

பள்ளிக்கூடங்கள் இப்போ சித்திரவதைக் கூடமாச்சு

பேரம்பேசி சிங்களம் பேரம்பேசியே விக்குது 

தமிழனின் தாரகை நங்கையை 

கெடுக்கும் காட்சியை

 

ஏனடா அறிவற்ற மந்தைக்கூட்டமே 

நீ ஒன்றும் சொந்தங்களோடு பிறக்கவில்லையா?

உன் பெற்ற அன்னையும் பெண்தான் இல்லையா? 

எங்கே புரியும் சிங்கள் நாய்களுக்கு 

 

பிச்சை எடுக்க…

பிழைத்து தப்பிவாழ ஓடிவந்த கயவர் கூட்டமிது….

வெட்டிவீழும் தமிழினம் என்னடா அடங்குதெண்டா நினைக்கின்றாய்…

மூடவனே புலத்திலிருந்து புதுயுகம் கிளம்பும்

 

புலத்திலே இங்கே புலம்பிடும் மக்களே!

வாருங்கள் நாமும் போர்க்களம் போவோம்!!

சட்டங்களை எடுக்கும் சட்டமா இலங்கையில் மதிக்கப்படுகுது? 

நீ சட்டத்தை நாடி இருந்திட்டால் வந்திடும் சனங்களின் பிணங்களே 

 

காலம் தாழ்த்தாதீர்

அழறும் கதறல்கள் என் காதிற் பட்டு தெறிக்கிறதே!

அடடா எதிரொலி என்றெல்லோ நினைத்தேன்

இப்போதான் தெரிகிறது அன்னை செத்ததுக்கு பிள்ளை அழ

அந்த அழுத பிள்ளை செத்ததுக்கு தந்தை அழுகின்றான்

 

அவனும் செத்திட்டால் யார்தான் அழுவர்? 

வெறிநாய்களின் கோரப்பற்கள் 

கொடியோடு அறுக்குது நம்முறவை

தொப்பூழ் கொடியோடு அறுக்குது எம்முறவை

 

அரைஞாண் கட்டாத பிஞ்சுகளுக்கு 

அரையோடு காணவில்லை 

இரையாகும் எம் தமிழரின் உடலங்கள் எண்ண 

புதுக்கணனி வேணும் 

 

ஆறறிவு மனிதனுக்கு என்று படைத்தானே 

சிங்களவன் ஓரறிவு கூட இன்றி ஒதுக்கிக் கட்டுகின்றான்

போர்வெறியோடு நிக்கும் சிங்களம் 

ஓர் முதுகேறி அடித்திடவேண்டும்

மொத்தமாய் சேர்ந்து நாமெல்லாம்

 

புலம்பெயர் உதரங்களே!

உதிரம் வழியும் முல்லைத்தீவிலே 

இரத்த ஆறு வெள்ளப்பெருக்கெடுக்குது

இந்துமாகடலுமோ மெல்லெனச் சிவக்குது 

 

இன்றே ஒலிப்போம்

ஓங்கி ஒலிப்போம்

எமக்கென வேண்டும் ஒருநாடு 

அதுவே நமது தமிழீழத்திருநாடு 

நிலவன் எழுதியவை | மார்ச்27, 2009

விடிவு தோன்றுமா?

விடிவு தோன்றுமா? சண்டைகள் சாய்ந்து சச்சர வோய்ந்து சமத்துவம் என்றுவரும் – வெடிக்

குண்டுகள் ஓசை, கொலை வெறிப் பேச்சு கேளா நாள்வருமா?

சிரிப்பினை மறந்து இருந்திடும் சனங்கள் சிரித்திட வழிவருமா – உடல்

தெருநடு வீதி தனில்விழும் அந்த ஓருநிலை மாறிடுமா?

மக்களை மக்கள் மதித்திடும் நிலைதான் மண்ணில் வந்திடுமா? – மொழிச்

சிக்கல்கள் ஓய்ந்து செம்மைகள் காணச் செகத்தில் நாள் வருமா?

அடக்கு முறையும் அசுரத் தனமும் அடியோடு ஓடிடுமா? – இனி

நடக்கும் காலம் தனிலே தானும் நன்மை கூடிடுமா?

அடிமை விலங்கு அனைத்தும் தகர்ந்து அகிம்சை நிலை பெறுமா? – புவி

விடிவு என்று புலரும் பொழுதை விரைவில் ஏற்றிடுமா?

தாய்மடியிற் படுத்துறங்கிய திண்ணைகளும்…..

ஆவணியிற் பூத்துக்குலுங்கிய வேப்பமரமும்…

அதனடியிற் தூங்கிய அந்த இனிமையான தூக்கமும்,

அதன்போது ஏற்பட்ட சொற்பனங்களும் என்று மீண்டும்?…

 

மனம்விட்டுச்சிரித்த நாட்களும் போய்…

நாளாகிமாதமாகி இன்று வருடங்களாகி…

அந்நிய தேசத்தில் ஓர் இயந்திர வாழ்க்கை…

இதையா நாம் கேட்டோம்?…

 

வினையாகிப்போன வினாக்கள் ஆயிரம்…

நம் பாதச்சுவடழிந்து மாற்றான் சுவடு பதித்த இடங்கள்,

நாம் ஓடி விளையாடிய அந்த புற்றரைகள்,

அழகான துவிச்சக்கரவண்டிப் பயணங்கள்…

 

கூட இருந்த நண்பர்கள் இன்று புகைப்படமாக வீட்டுச்சுவரில்…

சிரித்து மகிழ்ந்த மதகுகளும்வீதிகளும்கோயிலடிகளும்…

ஆலமர விழுது பிடித்தாடிய ஊஞ்சலும்…

கோயிலடி மணலிருந்து கொறித்த கச்சானும்…

 

திருவிழாக்களும்கொண்டாட்டங்களும்…

திரண்டுவரும் நம் உறவுகளின் சந்திப்புக்களும்…

சிறு சிறு சண்டைகளும்சச்சரவுகளும்…

சவாரித்திடலில் நடக்கும் வண்டிச்சவாரிகளும்…

 

நம்மூரிலிருக்கும் சிறு பெட்டிக்கடைகளும்…

அக்கடை முதலாளியை அழைக்கும் செல்லப்பெயர்களும்…

நண்பர்களுக்கு சூட்டும் பட்டப்பெயர்களும்…

வீதிக்கிரிக்கட்டுக்கு இடும் நம் குழுமச்சட்டங்களும்…

 

மரத்தடியில் விளையாடிய கிளித்தட்டுதாச்சியும்…

வயல்வெளியில் நாமடித்த கிட்டிப்புல்லும்…

களவாய் மாங்காய் பறித்து உப்புடனுண்ட நாட்களும்…

எங்காவது நடக்கும் இசை நிகழ்ச்சிகளும்அதில் போடும் ஆட்டமும்….

 

கல்லாலெறிந்து உடைக்கும் முட்டிகளும்…

கட்டி மகிழும் மணல் வீடுகளும்…

வீதிகளில் நாம்போடும் சைக்கிளோட்டப் போட்டியும்…

எல்லாமே பகற்கனவுகளாக இன்று…

 

விரைவாக இயங்கும் மனிதர்களும்…

நான்கு சுவர்களுடன் நாம் பேசுவது…

தொல்லை தரும் தொலைபேசிகளும்…

விசித்திர மனிதர்களுடனான நட்புக்களும்…

 

வெறுத்துப்போன எங்களின் வாழ்வும்…

எம் மண்ணிற்கு என்று நாம் திரும்புவோம் என்ற எண்ணமும்…

என்று எங்களின் சுதந்திரக்காற்றை சுவாசிப்போமென்ற ஆதங்கமும்…

கலங்கிய மனங்களில் குடில்போட்டு அமர்ந்துவிட்டன….

எப்போது?…எப்படி?…எங்களூர் எப்படி இப்போது?…

நிலவன் எழுதியவை | மார்ச்25, 2009

குடை

குளிர் காற்று…

சுற்றிலும் மழை…

என்னவள் நினைவோடு ஆற்றங்கரையில் நடை..

கையிலே ஓர் குடை…

கதவற்ற ஓர் குடிசை…

என்னவள் நினைவு என்மனது வாட்ட…

கால்களோ மணலிலே புதைந்து போக…

குளிர்காற்றும் வெப்பம் தேட…

என்னவள் கைப் பற்றினேன் ..

இறுக்கியே பிடித்துக் கொண்டேன்…

குளிர் வாட்டி எடுத்தது…

கட்டியே அணைத்துவிட்டேன்…

பின்னர்தான் தெரிந்தது…

வயதான பாட்டி என்று… 

குளிருக்கு சூடு கொடுத்ததற்காய் நன்றி சொல்லிச் சென்றாள் அந்த வயதான பிச்சைக்காரி ….

நிலவன் எழுதியவை | மார்ச்25, 2009

வீதியிற் கிடக்கும் இரு கற்களின் காதல்

நண்பர்களே நாமும் ஒரு சிலநிமிடம் கற்காளாகுவோம்… கற்களின் வேதனை எம் மனதின் வேதனை ஒத்துப் போகின்றது….

 

தார்வீதி…

தறிகெட்டோடும் வாகனங்கள்…

என்மீது ஏன் இத்தனை அழுத்தமோ? என்றெண்ணிக் கண்ணீர் வடித்தேன் 

 கீழே பார்த்தால் என்சுமையும் சேர்த்துச் சுமக்கும் என் காதலி…

 அடடா என்னதான் என்மீது பாசமோ?

 பாரவூர்தி வந்தாலும் என்னை அணைப்பாள் 

 முத்தமாய் கொடுப்பாள் 

 பாழ்பட்ட வீதி செப்பனிடும் மானிடன் வந்து 

 எம்மைப் பிரித்துவிட்டான் 

 அதனாற்தான் மானிட வர்க்கத்தில் விவாகரத்துக்களே நடக்கின்றன…

 என்னவள் எங்கே இருக்கின்றாளோ? 

 எப்பாரம் சுமக்கின்றாளோ? 

 என்றெண்ணும் நாம் பாதுகாப்பாக அடியில் இருந்தேன் 

 இன்று மழையிலும் வெயிலிலும் வேர்வை சிந்திக் கண்ணீர் வடிக்கின்றேன் 

 புரியாது என் வேதனை இந்த மானிட வர்க்கத்திற்கு.. 

 புரியும் என் வேதனை என்னைச் சுமந்து வந்து கொட்டுபவனுக்கு…

 என் குடும்பம் பெரிது…

 ஆலையிற்போட்டு உடைத்து திருமணங்கள் செய்து வைத்தனர்…

 நானும் ஓர் ஈழத்தமிழன் போன்றே

 குடும்பம் அனைத்தும் பிரிந்து…

 இறுதியிற் காதலியையும் பிரிந்து… தெரியாதவர்களுடன் ஓர் புதிய வாழ்வு…

 மாட்டுவண்டி வீதி என்று பெயரிட்ட என்வீடு இன்று 

 அதிவேக நெடுஞ்சாலையாம்….

நிலவன் எழுதியவை | மார்ச்25, 2009

தண்டவாளக் காதல்

இந்தத் தண்டவாளங்களுக்குத்தான் என்ன மனமோ?

ஒன்றை ஒன்று ஆழமாய்க் காதலிக்கின்றன….

அருகருகே இருந்தும் தொட்டுக்கொள்ளாத பாசக் காரர்கள்….

முத்தம் மட்டும் பிறக்கும் போதும் பிரியும்போதும் கொடுத்துக் கொள்கின்றன…

ஆனாலும் கள்ளன் தொடர்வண்டி

அடிக்கடி வந்து போவான்…

அணைத்துமே முத்தமாய்க் கொடுப்பான்…

மறுபடி ஓடிவிடுவான்….

ஆனால் நேரந்தவறா முத்தம் அதுமட்டும் கொடுப்பான்…

முத்தமிடும்போது உடற்சூடேற்றுவான்..

 அவனது உள்ளமும், ஏன் உதடுகளும் கூட கொதித்துக் கொண்டிருக்கும்…

 ஆனால் இவ்விரு தண்டவாளங்களும் அப்படியல்ல…

 மானசீகக் காதலர்கள்….

 ஒருவரை ஒருவர் பிரியாது காதலிக்கும் காதலர்கள்….

இவர்கள் பிரிந்தால் வந்துபோனவனின் இறப்பு நிச்சயம் 

உடலால் பிரிந்து எட்டவே இருந்தாலும் 

உண்மையான காதலர்கள்

நிலவன் எழுதியவை | மார்ச்25, 2009

கண்ணாடி

நான் உன்னைப் பார்க்கையில் நீ என்னைப் பார்க்கின்றாய்…

நான் என்னவள் நினைவோடு பார்க்கையில்…

உன் முன்னாடி நின்று மணிக்கணக்கில் பேசுவேனே…

தலைவாரி தலைவாரி முடி போனதே…

நீ என்னை அறியாது சிரித்தாய் நான் என்னை அறியாமற் சிரித்தேன்….

இப்போது புரிகின்றது ஏன் நீ சிரித்தாய் என்று…

கள்ளியடி நீ…

முடிபோன என் தலை உன் சகோதரமாகப் போகின்றது என எண்ணித்தானே சிரித்தாய்

குறும்புக் காரக் கண்ணாடி 

 ஓ நான் அவளைக் காதலிக்கவில்லை…

அப்படியானால் உன்னையா காதலித்தேன்?…

நிலவன் எழுதியவை | மார்ச்19, 2009

தமிழினம் தேசத்தின் விடுதலை நோக்கி

வானம் வைகறை ஏறும் என்றவன் காணும் போதினில் சாகும் என்சனம், ஏறும் கிபிர்கூட ஏகும் குண்டினால் வேகும் உடல்கூட வெந்தணலாடும் வேளையில் என்மனம் வேகும் போதிலே சாகும் போதிலும் காக்க எமனா வருவான் இனி நாமே போகும் இடம் தேடி நாடும் போதினில் கிடைத்திடும் தனித்தமிழீழம்

 

தமிழினம் தேசத்தின் விடுதலை நோக்கி

தாயகம் போரிலே வெல்லாலாம் என்றேங்கி

தினம் செத்திடும் எம் உறவுகள் பிணங்கள் மீது

நான் வைத்திடவேண்டும் எம் பாசத்தின் வேரை

 

வாழத்துடிக்கும் உறவுகள்

வாழ்விழந்த விதவைகள் 

வாழ்வையே தொலைத்த சிறுவர்கள் 

வாழநினைக்கும் மக்கள் சோகமே

நிலவன் எழுதியவை | மார்ச்18, 2009

கொதிக்கும் என் நெஞ்சு

கொதிக்கும் சட்டிக்கும் தண்ணீர் படக்கூடாது வெடிக்கும்

அடிக்கும் திண்ணையில் என்னை விடக்கூடாது ஒடிக்கும்

அந்த நொடிக்கும் எனக்கும் இருக்கும் பந்தம் துடிக்கும் 

அப்போது வந்தவர் மனமெல்லாம் துடிக்கும் 

அதைப்பார்த்து நாலஞ்சு நன்றாக இங்கே நடிக்கும் 

என்றெண்ணி கொடிக்கும் வளரும் இடும்பை கூட 

மடிக்கும் தன் கொடி நிலம் நோக்கி 

வெடிக்கும் என் நெஞ்சு கொடுக்கும் அவர்களுக்கு விளக்கம்

 

———————————————————————————————————————————————–

இனவெறி கொண்ட சிங்களவன்

கொலைவெறிதாண்டி 

மதவெறி தாண்டி ஏதுமறியாப் பிஞ்சு 

பிறந்தபின் கொன்ற காலம் போய்

கருவிலிருந்ததை மட்டும் கலைத்தழித்ததுபோய்

தாயொடு சேய் சேர்த்துக் கொல்லும் காலம்டா 

தண்ணீர்சிந்திய தேசத்தில் இன்று

கண்ணீர் சிந்தியே வெள்ளபெருக்கோடுதடா

காலம் கோடிட்டுக்காட்டியது நாம் சேரவில்லை,
காயம் கோடிட்டுக் காட்டுகின்றது இப்போ நாம் சேரத் துடிக்கின்றோம்

காலத்தின் போதே சேர்ந்திருந்தால் காவியம் எழுதியிருக்கலாம்
காயத்தின் போது சேர்வதனால் ஒப்பாரிகள் எழுதவேண்டியுள்ளோம்

தமிழ் என்னும் மூன்றெழுத்தில்
முக்கோடி பதிலிருக்கும்
தமிழன் என்னும் ஓரினத்தில்
ஓராயிரம் கிளையிருக்கும்
கிளைஉடைத்து தனிமரமாகவேண்டாம்
கிளைபரப்பி ஓரடியாகுவோம்

அடிமரம் என்றுமே பலமாய் ஆக்குவோம்
ஆயிரம் தடைவரினும் அதனோடு சேர்ந்து தாக்குவோம்

உனக்குள் எனக்குள் என்ன பாகுபாடு?
நாம் என்னும் ஓர்சொல் இணைக்கிறதே மையக்கோடு
வேற்றுமை களைவோம்
உண்மையாய் உழைப்போம்

களத்தில் துப்பாக்கிப் போராட்டம் மட்டுமல்ல போராட்டம்
பேனாகூட பெருந்திசை மாற்றும்
நாமும் போராளிகள்தான் துப்பாக்கி ஏந்தியவர்களல்ல
துர்ப்பாக்கியத்தால் பேனா ஏந்தியவர்கள்

அந்நியர் வந்து பாத்திடும்போது அதிசயம் தானே பூத்ததடா!

கவி சொன்னவர் பலர் பார்த்திடும் போது ஆகாயம் தானே பார்த்ததடா

புலி ஆகாயம் தானே பாய்ந்ததடா

 

வென்றிடும் களம் நாடிச்சென்றதில்லை அங்கே

குன்றிடும் மனம் என்றும் இருந்ததில்லை 

சென்றிடும் வீரர் கொன்றிடும் வரையிலும் ஓய்ந்ததில்லை

களம் என்றிடும் வீட்டினில் கண் தூங்கவில்லை 

 

வெடித்திடும் குண்டும் பயம் கொடுக்கவில்லை

பாயும் துப்பாக்கிச்சன்னமும் கூட துளைக்கவில்லை

சாயும் வேங்கைகள் என்றுமே நமைவிட்டுப் போகவில்லை

பாயும் கரும்புலிகூட சிரிக்கத் தவறவில்லை 

 

சென்றிடும் போதும் சிரித்திடும் முகம் 

பகை கொன்றிடும் போது கலங்குது மனம்

என்றிவர் மனமாறுமோ, களம் தீருமோ

கண் கொண்டவர் மீதினில் சதிராடுமோ?

 

காற்றுக்கூட முகவரி மறந்தது

மழையும் கூட வீடுகள் தேடுது

மேகமும் கூட புலிக் காற்றுக்காய் ஏங்குது

நிலங்களும் கூட தோள்வெடிப்பேற்குது 

 

துப்பாக்கிச் சன்னமும் சோம்பேறியாகுது

துர்ப்பாக்கிய நிலையான வவுனியா முகாமிலே

கிளியில் கிளிகளின் கதறல்கள் கேக்குது 

மாங்குளத்திலே தமிழ் யாழிகளின் இரத்தமோ பாயுது

 

அழுதிடும் குழந்தையும் ஆதரவு தேடுது

அன்னையர் இன்றி அது தானே சாகுது 

அணைத்திட இருக்கும் புலி பயங்கரவாதி பெயர் வாங்குது

ஆதரவு கொடுத்திட நாமோ தயக்கம் காட்டுது

 

நிலம் வாங்கவேணும் 

புலத்தில் நகை வாங்கவேணும் 

கழுத்தில் அதைப்போடவேணும் 

ஈழத்தில் கழுத்தறுபடுகுது 

 

பிசாஎண்டால் தான் கழுத்துக்க இறங்குமாம் 

மக் டோனால்ஸ் எண்டாத்தான் சாப்பாடு செமிக்குமாம் 

சிவாஸ் அடிச்சாத்தான் வெறியும் கூடுமாம் 

சிவாவோ அங்கே கஞ்சியின்றி சாகிறான் 

 

பொறுத்தது போதும், இழந்தவை போதும் என்றும் நிலைத்திட வேணும்

தமிழ் வாழ்ந்திடவேணும், கண் விழித்திடவேணும் 

அட்டிலில் இருக்கும் விட்டில்கள் அல்ல எங்கள் உறவுகள்

ஆதரவின்றித் தவிக்கும் சிட்டுக்கள் 

 

இரத்தம் ஆறாய் ஓடுது 

இந்துமாகடல் கூட செந்நிறமாகுது

இன்னம் சிறிதுகாலம் தான் புலியை அழிக்க இல்லை

ஒட்டுமொத்த தமிழை அழிக்கவென்று கூவுது சிங்களம்

 

பாடிடும் வேங்கையும் பணியவேண்டுமாம் 

கோடிட்டுக்காட்டுது இனவெறியரசு 

புலம் தனில் களமாடிடும் வேங்கையும் பணிந்திடவேண்டுமாம்

அடக்க இது ஒன்றும் அரையடிப்பூனையல்ல 

ஆறடிப் புலி என்று உரக்கவே சொல்லுவோம்………… 

நிலவன் எழுதியவை | மார்ச்6, 2009

நாடு வேண்டும் அதை நாம் நாடவேண்டும்

நாடாய் இழந்தாய்

 

கொடுப்பதற்கு ஏதுமின்றி

கெடுப்பதற்காய் நம் உறவுமின்றி

வாழ்வதற்காய் கட்டிவைத்த கல்வீடுமின்றி

நடுத்தெருவில்நின்று நீ கத்தும்போதும் 

திறக்காது கண்கள் சர்வதேசத்தின் கண்கள்

 

தூங்குபவனை எழுப்பலாம் 

தூங்குபவன் போல் நடிப்பவனை உசுப்பமுடியாது

நடிக்கிறது ஐநா. நாவடக்கி, எம் குரலடக்கி

வெடிக்கிறது எம்மவர் கத்திய தொண்டைகள்தான்

 

இன்னும் ஏன் விலைக்கொடுப்பு

இதுக்கும் மேல் ஏன் சர்வதேசம்

எழும் கேள்விகள் நியாயமானதே

அதிகாரவர்க்கத்தின் ஆட்சிபீடமல்லவா

 

ஐநா. ஐக்கியநாட்டின் குறுங்கல் வடிவம் 

தமிழாங்கிலத்தில் நான் நா…….. 

நான் தான் இவ்வுலகின் சொல் என்றுரைக்கும் ஐ.நா…

காசாவில் கொன்றபோது கொதித்ததே!

ஈழத்தில் 4000 தாண்டியும் அமைதி காக்கின்றதே ஏன்? 

 

கேட்கப்படவேண்டிய கேள்வி என்னிடமல்ல 

உன் நாவிடம் கேள்! 

உதிரம் கொட்டும், ஊர் உறவும் பிரிந்து கிடக்கும்,

கதிரவன் கூட காற்றின்றி ஆடும் 

வந்தவழி தேடி காற்றுமே அலையும்

எங்கே போனார்கள் என் சுவாசங்கள் என்று…

 

சப்பாத்துக் கால்த்தடம் பார்த்து நாய்களே குரைக்கும்

ஏன் தமிழன் வாழ்ந்த பூமியடா

தரணியில் இவன் யாரடா என்று அதுவே உண்ணாவிரதம் இருக்கும்

காகம் , குருவி கூட எங்கே என் உறவுகள் என்று ஏங்கித் தவிக்கும்

 

மரமேறிய மந்திகளோ துரத்த ஆளின்றி சோகத்திற் கிடக்கும்

கீழேபார்த்து யார் இப்புது மந்தி என் கூட்டத்தில் என்று சிங்களவனுக்குரைக்கும்

தீண்டிய பாம்புகளும் சேரிடம் தேடும் 

அந்நியன் படை வந்து அரோரம் பாடும் 

 

வெற்றிகள் என்றும் எதிர்பார்க்க முடியாது

வேதனை என்றும் நாம் மறக்க முடியாது 

குற்றுயிரோடும் குண்டுகள் சுமப்போம்

குறுந்தொகை உடைத்து புறநானூறு படைப்போம்

 

வாகை சூடி, வந்தபகை ஏறி வானிலே கொடியேற்றுவோம்

வாசலிலே கூடி வசனங்கள் கூட்டி தலைவன் புகழ்பாடுவோம்

நாடிழந்த தமிழன் தனிநாடு அமைத்திடுவோம்

மற்றவனை நம்பி பிரயோசனமில்லை

 

கற்றவனை நம்பி கல்லெறிப்பட இன்னமும் முடியவில்லை

காத்திருக்காதே! கலங்கிவிடுவாய்!!

பார்த்திருக்காதே அழுதுவிடுவாய்!!! 

இன்றே புறப்படு களமாட அல்ல புலமாட

 

இன்றே புறப்படு உன் உறவைக்காக்க

அன்றிலிருந்து கொல்கின்றான் இன்னமும் வலிக்கவில்லையா உனக்கு!

ஆயிரம் சொன்னாலும் தமிழன் மறவர்கள்தான் 

ஐநூறு கொடுத்தாலும் தம்மினம் மறந்தவர்கள் தான் 

 

சர்வதேசம் தலையிடவில்லை, பலியிட்டுத் தீர்க்கின்றதே ஏன்?

வியாபாரமில்லையாம் தமிழனுக்குதவினால்

எண்ணையும், ஏழுகடலில் பாதிக்கடலையும்

தம்பூமி என்றுசொல்லி விற்றே தீர்க்கின்றது சிங்கள ஓநாய்

 

ஒட்டகத்துக்கு கொட்டில் குடுப்பதும் ஒன்றுதான் 

சிங்கள்வனுக்கு சிறுபூமி கொடுப்பதும் ஒன்றுதான் 

வெட்டுவோம் இனவெறியரசின் கொடுமைகளை 

கட்டுவோம் இன்றே எமக்கென்றொரு நாட்டினை

 

வந்தவன் போனவன் எல்லாம் ஏறிமிதிக்க 

பயங்கரவாதம் என்னும் ஓர்சொல் தடை

உடைக்கவேண்டும் அத்தடையை

கொடுக்கவேண்டும் தனித் தமிழீழத்தை

 

ஏற்றுவோம் வீட்டில் விளக்கல்ல

காட்டில் போருமல்ல 

நாட்டில் பட்டமும் அல்ல 

தமிழீழத்தில் தேசியக்கொடியினை ஏற்றுவோம்……………

நிலவன் எழுதியவை | மார்ச்6, 2009

பகைவென்று நாடமைப்போம்

வாழும் பூமி, வைகறை கவ்வும்

சாகும் போதினில் தன்னிலை எண்ணும்

வாசம் செய்ததும், வனத்தில் சாகசம் புரிந்ததும் ஏன் இன்னம் அடக்கம்?

காசு இல்லையே! கைகளில் காசு இல்லையே!! காத்திட வாடா தமிழா!!!

மறத்தமிழன் நீயோ மரத்தமிழனாகின்றாய்

குறைத்தமிழ் ஏனோ கதைத்து தமிழ்க் குடும்பத்தை அழிக்கின்றாய்

 

வெட்டுவேனாம், பின்பு காட்டுவேனாம்

அதிலும் ஆயிரம் முறைகள் நொட்டுவேனாம்

கத்துவேனாம், கூடவிருந்துவிட்டு குத்துவேனாம் என்று

சொன்னவனெல்லாம் கூடு கூட இன்றி குறுகிக் காய்கின்றனர்.

 

வாழவிடம் இன்றி வசைபட்டு சாகின்றனர்.

ஆயிரம் பாயிரம் எழுதினாலும் ஆசைகள் குறைவதில்லை

ஆசைகள் எட்டித்தான் வானத்திற் பறந்தாலும் மழைகளும் பொழிவதில்லை

காலத்தின் நல்ல நேரத்தின் வடுசுமையா தமிழனவன்

சுய இலாபத்தில் அமிழ்ந்துபோகுமா தமிழரின் போராட்டம் இல்லை

 

துளிர்விட்டு, தூத்துமம் தூபி கடல்தொட்டு வாழுமா?

சரித்திரப்புதல்வர், சாதி வெறியர் பெயரழித்து

தனித் தமிழீழ நாடமைத்து, தலைவர் வழி செல்லும் விசித்திரப்புதல்வர்கள் புகழ் எழுதப்படட்டுமே!

 

நடக்கும், வெல்லும் ஈழம் அடியிட்டுப் பணியாது கொல்லும் கொழும்போ திசைகெட்டு தெரியாது ஓடும்

காலம் நீண்டாலும் கடிகாரம் நிற்பதில்லை, இடங்கள் போனாலும் உறுதிகள் குறைவதில்லை.

பொங்கட்டும் தமிழினம் ஓரலையாய்

கண்கொண்ட சுனாமி கண்டவனை விரட்டட்டும்

வந்தபகை வென்றே தமீழம் மலரட்டும்

நிலவன் எழுதியவை | பெப்ரவரி4, 2009

சர்வதேசம் பதில் சொல்லுமா?

 

இலங்கை இராணுவம் அண்மைய நாட்களாக மக்கள் மீது எரிகுண்டுகளை வீசிவருவதாக வெளியான செய்திகள் குறித்து ஏற்பட்ட குழப்பங்களையும், இந்த எரிகுண்டுகள் என்றால் என்ன? அவை எவ்வாறு தொழிற்படுகின்றன? அதன் தாக்கங்கள் என்ன? அது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது? என்பதுபற்றியான ஓர் அலசலினை இங்கு பார்ப்போம்.

white_phosphorusbone1

பொஸ்பரஸ், இது ஓர் ஆவர்த்தன அட்டவணையில் அணுஎண் 15 கொண்ட ஓர் மூலகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அணு நிறையானது 30,9738 g.mol -1. இது விஞ்ஞான ரீதியான தகவல். இது தவிர நாம் பார்ப்போமானால் இந்த பொஸ்பரஸின் தன்மை பற்றி சிறிது அவதானிக்கவேண்டும். இந்த பொஸ்பரஸ் ஆனது வளி அதாவது ஒக்சிசன் படுமிடத்து எரியக்கூடிய தன்மை உள்ளதனால் இது எப்போதும் நீரில் இட்டே பாதுகாக்கப்படும். இது பலவகைப்படும் அதாவது அதன் தன்மை மற்றும் நிறங்களுக்கு ஏற்ப வெண்பொஸ்பரஸ், செம்பொஸ்பரஸ், கருபொஸ்பரஸ், நிறமற்ற பொஸ்பரஸ், மஞ்சள் பொஸ்பரஸ் என்று வகைப்படும். இதில் தாக்குதிறன் அதிகமானது சேதம் விளைவிக்கக் கூடியது என்றால் செம்பொஸ்பரஸை சொல்லலாம். அதைக்காட்டிலும் பன்மடங்கு சேதம் விளைவிக்கக் கூடியது என்றால் வெண்பொஸ்பரஸ்தான். 

white_phosphorusbone

இந்த செம்பொஸ்பரஸானது நீரில் அமிழ்த்திவைத்தே பாதுகாக்கப் படுவதோடு அது நீரிலிருந்து எடுக்கப்பட்டு வளிபடும்படி வைக்கப்படும் பட்சத்தில் அது மிக விரைவாக தீப்பற்றக்கூடிய தன்மையைக்கொண்டுள்ளது. இதனை ஆய்வுசாலைகளில் இருந்து அதாவது பாடசாலை ஆய்வுகூடங்களில் இருந்து களவாக சட்டைப்பைகளில் எடுத்துச்செல்ல எத்தனித்த பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அச்சந்தர்ப்பங்களில் மாணவர்கள் இதனால் எரிக்கப்பட்ட சம்பவங்கள் கூட இடம்பெற்றிருக்கின்றன. அதற்கடுத்ததாக வெண் பொஸ்பரஸினைப் பார்ப்போமானால் அது மிகவும் அதிக எரிபற்றக்கூடிய தன்மை காணப்படுகின்றது. அதாவது அது மிகை ஒக்சிசன் படக்கூடிய இடத்தில் வைக்கப்படுமாயின் அது வெடித்துக்கூட சிதறும் சந்தர்ப்பம் உள்ளதோடு நீண்டநேரம் எரியக்கூடிய தன்மையும் காணப்படுகின்றது. 

ach10

ach8ach6

ஒவ்வொரு சிறுதுளி வெண்பொஸ்பரசும் தன்னைச்சூழ ஒக்ஸிசன் இருக்கும்வரை தான் அழியும்வரை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. இந்தவகை பொஸ்பரசை பாவித்துத்தான் அமெரிக்கா போன்ற சில நாடுகள் எரிகுண்டுகளை பாவித்து வந்தன . பாவித்து வருகின்றன அதாவது இவ்வகைக்குண்டுகளில் நீரில் அமுக்கி வைக்கப்பட்டிருக்கும் குண்டுகள் வீசப்படும்போது நீர் வெளியேற்றப்படுவதனால் அவை வளியிலுள்ள ஒக்ஸிசனை பாவித்து எரிய ஆரம்பிக்கும். இவை எரிவதன் மூலம் பெருமளவான வெப்பம் ஏற்படுவதோடு அவை வீசப்படும் இடத்தில் இருக்கும் அனைத்துப்பொருட்களையும் பற்றவைக்கும் தன்மை உடையன. 

ach9ach7ach5

அமெரிக்கா வியட்னாம் போரின்போது இவ்வகைக் குண்டுகளை பாவித்தது இணையங்கள் மூலமும் செய்திகள் மூலமும் அறியமுடிகின்றது. இவ்வகை குண்டுகள் வீசப்படும்போது ஒரு சிறு நீர்த்துளியளவு பொஸ்பரஸ் கூட பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அல்லது ஒருவரைக் கொல்லக்கூடிய தன்மையக் கொண்டிருப்பதாகவும், ஒரு குண்டு வீசப்பட்ட இடத்தில் அது நிலத்தில் வீழ்ந்து வெடிக்குமாயின் ஒரு குறிப்பிட்ட பாரிய பரப்பளவுள்ள ஓர் இடத்தில் இருக்கக் கூடிய மக்கள், விலங்குகள், அனைத்துப் பொருட்களையும் எரிக்கும் தன்மை உடையனவாகவும், இவை வீசப்பட்ட இடத்தில் இருக்கும் அனைத்தும் கருகிக் காண்ப்படக்கூடும். மனிதனின் தோலில் படுமிடத்தில் வெண்குஸ்டம் அல்லது வெண்தோல் நேய் ஏற்படுவதுபோல தோலுடன் சேர்ந்து எரிந்து மேலே இருக்கும் தோலை அது எரிப்பதன் மூலம் அவ்விடம் ஓர் முற்றான தாக்கத்திற்கு உள்ளாகி தோல் நீக்கப்பட்டு தசைப்பகுதி வெளித்தெரியும் படி ஆகின்றது. 

180px-ayman21

இலங்கைக்கு யார் இவ்வகையான ஆயுதங்களை வழங்கக் கூடியவர்கள் என்று பார்க்கும் பட்சத்தில் முதல் நிலையில் இருக்கும் நட்புநாடான அமெரிக்காவோ அல்லது ஸ்ரேலோதான் வழங்கிஉதவி இருக்கவேண்டும், இதற்கு காரணமாக பார்த்தால் கொழும்பில் வைத்து றொபேட்டோ பிளேக் பெருந்தொகை ஆயுதங்களை வழங்கிய செய்தி அனைவருக்கும் தெரிந்திருக்கும், அச்சந்தர்ப்பத்தில் பெருமளவிலான ஆயுதங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டது. அதில் இவ்வகை வெண்பொஸ்பரஸ் குண்டுகளும் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதுவே உண்மை. திரை மறைவில் வழங்கப்பட்டு தமது தார்மீக ஆதரவை நல்கிவரும் அமெரிக்காதான் இதனை வழங்கியிருக்கின்றது. இதன் அரசியற் பின்னணி பார்த்தால் தமக்கு ஓர் பலமான நட்பு நாடு ஒன்று தென்னாசியப் பிராந்தியத்தில் சீனா, இந்தியாவிற்கு எதிராக போர் தொடுக்கப்படவேண்டிய ஓர் சூழ்நிலை தேவைப்படும் பட்சத்தில் தமது கைப்பிள்ளையாக பாவிப்பதற்கு இலங்கையை பயன்படுத்த அமெரிக்கா முயற்சி செய்துவருவதுதான் உண்மை. 

ach4victimofwhitephos(வியட்னாம் போரின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது மியூசியத்தில் இருந்து எடுக்கப்பட்டது)

இவ்வகையான் குண்டுகள் இரசாயன ஆயுதங்களாக வகைப்படுத்தப்பட்டு தடைசெய்யப்பட்டுள்ளதோடு இவை மக்கள் வசிக்கும் பகுதிகளில் வீச முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன. இவை சுருங்கக் கூறின் ஒரு பொஸ்பரஸ் துளியானது கையில் விழும் பட்சத்தில் கையை எரித்து துளையாக்கி துவாரமிடுவதுடன் எழும்பைக்கூட எரித்து தசைப்பகுதிக்குள் ஊடுருவிச் செல்லும் சந்தர்ப்பத்தில் கூட அவை வெடித்து சிறு துகள்களாக சிதறி பாரிய சேதத்தினை ஏற்படுத்தும் என்பதுதான் உண்மை. 

ach3picphp

நம் உறவுகள் இக்குண்டுகள் வீசி எரிக்கப்படுமுன்னர் நாம் மிக விரைவாக பகைமையை மறந்து வேறுபாடுகளைக்களைந்து ஓரணியிற் திரண்டு இன அழிப்புப் போருக்கு ஓர் முடிவுகட்டி நம் உறவுகளை காப்போமாக என்று உறுதி எடுப்போமாக. இனியும் தாமதிக்கவேண்டாம், இந்த ஒரு குண்டே போதும் 100பேரை ஒரேநேரத்தில் எரித்து சாம்பலாக்க. இணைவோம், ஓரணியில் இணைவோம். ஒருமித்து குரல் கொடுப்போம். ach1ach2ach3

இந்தியாவில் இங்கையைச்சேர்ந்த இராணுவ வீரர்களுக்கு விசேட இராணுவப்பயிற்சியினை இந்தியாவின் ஜெயப்பூர் மாநிலத்தில் உள்ள இராணுவப் பயிற்சிப்பட்டறையில் இந்திய இராணுவ அதிகாரிகள் வழங்கிவருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ உயரதிகாரியொருவர் வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கருத்துரைக்கும்போது தெரிவித்துள்ளார். இதில் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் பங்குபற்றுவதாகவும், சரத்பொன்சேகாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் இதில் கலந்துகொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழ்நாட்டில் இலங்கை விமானப்படை வீரர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த பயிற்சிகள் பொதுமக்களுக்கு தெரியவந்ததை அடுத்து, பொய்யான செய்திஒன்றினை இந்திய அரசு கூறி அதாவது உதவி கேட்கப்பட்ட பட்சத்தில் அவ்வுதவி மறுக்கப்பட்டதாகக் கூறி அச்செய்தியை இருட்டடிப்பு செய்து அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதாகக் கூறி விமானத்தின் மூலம் அனுப்பி வைப்பதுபோன்று அனுப்பி வைத்து பெங்களூரில் அவர்களுக்கு பயிற்சிகளை அளிப்பதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்துவருவதாக அவர் மேலும் கூறுகையில் தெரிவித்தார்.

பெங்களூரில் இராணுவ பயிற்சிகள் அளிக்கப்படும் சந்தர்ப்பத்தில் தமிழர்களின் எதிர்ப்பு இந்திய அரசாங்கத்தினைக் காட்டிலும் பெங்களூர் மீதே அதிகம் வீழ்வதனால், அதன் மூலம் பெங்களூர் மற்றும் தமிழ்நாட்டுத் தமிழருக்கும் இடையில் பிரச்சனைய உண்டாக்கி அதன்மூலம் காங்கிரஸ் மீண்டும் பலமான ஆட்சியினை தமிழ்நாட்டின் உதவியின்றி அமைப்பதற்கு பெரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது என்பதும் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றி குளிர்காயும் வேலையில் நடவடிக்கையில் காங்கிரஸ் தீவிர முயற்சி எடுத்துவருவதுவும் தெரியவருவதாக அரசில் சம்பந்தமாக பேசவல்ல அதிகாரி ஒருவர் தமிழ்க்காற்று இணையத்திற்கு தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டுத்தமிழர்களின் ஈழம் சம்பந்தமான பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்க அடக்குமுறை மூலம் அவர்களை அடக்க காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி : தமிழ்க்காற்று

என்மனம் பார்த்தவேளை என்னுயிர் துடித்தது யாரறிவர் இக்காணொளியைக்கண்டபோது….

சுடுகலன்கள் துப்பிய துப்பாக்கிக்குண்டுகள் துளைத்தது தமிழ உயிர்களை மட்டுமே, ஏவும் ஏவுகணைகளும் அணைத்தது எம் உடல்களை மட்டுமே, கொல்களம் நீ நாட்டி வன்னியில் படைதிரட்டி போராடும் உன்கனவு பறந்தோடும் நாள் தொலைவிலில்லை, களமாடும் உன்வீரர் உடலதை ஏந்த நீ பாத்திரம் கேட்டே வாங்கிடு இப்போதே உன் தோள்கொடுக்கும் நாடுகளிடம்

களவாளிப்பயலே இராஜபக்ஸ, கள்ளிச்செடி முள்மீது நீ நின்றாலும், கள்ளியின் உள்ளிருக்கும் ஈரலிப்புத்தான் எம் மனசு, கொள்களத்தில் பல்லிளிக்க கல்லெடுத்துவீசும் கயவர்ல்ல நாம், வந்தோரை வாழவிட்டு, வந்தவன் வாழ்ந்துகொண்டு நமை நசுக்க (நீயும் தமிழ்நாட்டிலும்) மண்டியிட்டு நாம் இருக்க எப்போதும் நினைக்காதே, கொன்றொழித்து புதைத்தெழுவோம் நாம் பொறுத்திருந்துபார்.

கிலியெடுத்து, கிளிபிடித்து, கொலைநடத்தி இன்றே நம் முல்லைகளைக்கொன்று முல்லைத்தீவில் நிற்கின்றாய், களம் அமைத்து, வரி உடுத்தி காத்திருக்கும் நம் சொந்தங்கள் அங்கே காத்திருக்கு உன் வருகைக்கு, பார்த்திருக்கு உன் பாதச்சுவடுகள் பட்டழியும் நிலங்களின் நம் தமிழரின் குருதிகளில் நனைந்த அப்பூமி மீண்டும் உன் குருதி வெள்ளம் பாயக்கூடாது என்பதற்காகவா அணையுடைத்து தாக்கினார்கள்?

வென்றுடும் தமிழர் சேனை, கொன்றிடும் பகைவரை, என்றிடும் எம் நாக்கள் வென்றிடும் ஈழத்தை

வென்ற வீரர் வரலாறு, வெறுமனவே போய்விடா, கண்டவர் பேச்சு கனநாள் அடிபடா, கொன்றிங்கு போட்டதும் உலகே துணை கொடா! வென்றிங்கு காட்டுவோம் ஈழவர் நாமடா

கொட்டிக்கிடக்கும் சிறுநங்கை, கட்டியணைக்க முடியவில்லை எம் சரித்திரப் புதல்வர்களை. எட்டடி வைத்தே எரிமலையாய் வெடித்தவர்கள் வெட்டுண்டு கிடக்கின்றனர் நம் தமிழினம் வாழ்வதற்கு

நீங்கள் ஏழை யானோ பரம ஏழை, புலவரவன் மாளிகையிற் பாடினால் பொன்முடிச்சு பரிசளிக்கும், யானோ யாழில் பாடினேன் பரதேசி பட்டம் கிடைக்கும்

உள்ளத்திற் கிடக்கும் உறக்கங்கள் சோகமிருக்க காதலேது இங்கே வார்த்துக்கொடுக்க

களமாடியே கிடைக்கவில்லை ஈழம் இன்னும், நான் பாடி வரலாற்றில் என்பெயரா? 

புலியை வாழ்த்த நானோர் எலிவால் பிடித்த சிறுவன், விடுதலை நெருப்பிலோ நான் வீசிப்போகும் சாம்பல், எரியும் ஈழத்தின் காவோலை, காசோலை இருந்தால் புலத்தில் களமாடச்சென்றிருப்பேன். இலைகளின் இருப்பிடமறியாததால் வலையிடம் வந்துள்ளேன்.

 

நம்பிக்கை

என்காலே சிலவேளை சறுக்கும் நேரம் 

என்மூளை சிலவேளை மங்கும்போதும்

உரத்து சொல்லமட்டும் முடிகின்றது ஈழம் விடியும்

கூட இருக்கும் நட்பின்மேலே கடுகளவும் இல்லவே இல்லை நம்பிக்கை

 

களமாடவேண்டும் ஆசைதான்

குளமாடி விட்டனரே

பொங்கும் படை வீட்டு முற்றத்தில்

எறிந்த எறிகணையோ ஒன்று 

வீழ்ந்தது பொங்கிய பானைக்குள்

வெற்றிகள் ஏதும் கிடைக்கவில்லையா? மலர்ந்த சேதி மறந்துவிட்டதே

 

இனம் தினம் அழியும் செய்தி கேட்கும்போது, கனமான கண்ணீர் கண்களை நிரப்பி

 

கவிதகளால் அசரவைக்க யான் ஒன்றும் கவிஞனேயல்ல, எனினும் தங்களுக்கு என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்

 

வெல்லும் கரை, முள்ளும் மலர், அழகான ரோஜாவிற்கும் பாதுகாக்க முள்ளுண்டு, அழியும் நம் இனம் காக்க புலியைத்தவிர யாருண்டு?

நிலவன் எழுதியவை | ஜனவரி24, 2009

மதவாதம்

தமிழன் என்ற இனம் ஒன்றுதான், பிரிவினை என்பது என்னமோ அவர்களிடத்தில் தோன்றிய ஒன்றே ஒழிய வேறல்ல. இதில் என் சொந்தக்கருத்துக்களை இடுகின்றேன், நாம் அனைவரும் சிந்திக்கவேண்டியது ஒன்றே! நம் ஒற்றுமையின்மையினால் நாம் நிறைய இழக்கின்றோமே தவிர எதனையும் சாதிக்கவில்லை, ஆனால் நம்மருகே இருக்கும் சீனர்களின் ஒற்றுமையை நாம் உற்றுநோக்க வேண்டிய காலம். தான் தன்னுடைய வியாபாரத்தில் இலாபம் கிடைக்கின்றதோ இல்லையோ தன் இனம் சார்ந்தவர்களை வேலைக்கமர்த்தி கை நிறய வசதிகளையும், பராமரிப்பினையும் செலுத்துமிடத்து வேலை செய்யும் அவர்களும் மரியாதையுடனும், விசுவாசத்துடனும் நடந்துகொள்கின்றனர். அதைவிட அத்துறையில் அவர்களை தனியே ஓர் இடத்தில் புதிதாக ஓர் நிர்வாகத்தினை ஏற்படுத்தி அவர்களில் நல்லவர்களை பொறுப்புக்களில் அமர்த்தி, மிகச்சிறந்த நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்தி தானும் தன் இனம் சார்ந்தவர்களையும் முன்னேற்றும் தன்மையும், கடின உழைப்பும், சகோதர பாச உதவு மனப்பாங்கும், விடா முயற்சிகளுமே அவர்களை இன்று சர்வதேசத்தில் உயர்த்தி வைத்திருக்கின்றது என்றால் அது மிகையல்ல. ஆனால் இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியன யாதெனில் அவர்கள் வழங்கும் உயர் சம்பளமும், சலுகைகளுமே அவர்களையும் தங்கள் முதலாளிக்கு மனப்பூர்வமாகவும் முழு ஒத்துழைப்புடனும் வேலை செய்யும் ஓர் இடத்தினை வழங்குகின்றது. அதனை விட தான் இவ்வேலையை விட்டால் தனக்கு தனியான ஓர் வேலையை தொடங்கினால் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அறிய ஓர் உந்துகோலாக அமைகின்றது. அதனை விட தனியாக ஓர் வேலையில் சேருமிடத்தில் தனக்கு இவ்வாறான சலுகைகள் கிடைக்காது என்றும் நன்கறிவார்கள். ஆகவே அவர்கள் விசுவாசமாக வேலை செய்கின்றனர். இவர்கள் சொல்லும் சேய்தி ஒன்றுதான் “நீ மற்றவர்களுக்கு சலுகைகளை வழங்கு நீயும் அவனும் சந்தோசமாக இருக்கலாம்” என்னும் சீன பழமொழி ஒன்று. 

 

இதனையே தமிழிழ் சொல்லியிருக்கின்றனர் ” ஊர் பிள்ளையை ஊட்டி வளர் தன் பிள்ளை தானே வளரும்” என்று இவ்விடத்தில் தமிழர்களில் இருக்கும் ஒற்றுமையைப்பற்றி சிந்திக்க வேண்டி இருக்கின்றது. 

 

வேலை வழங்கும் ஒவ்வொருவரும் தான் இவர்களைப்பாவித்து எவ்வாறு உழைக்க முடியும் என்றும், தாம் எவ்வாறு முன்னேற முடியும் என்பதும் மட்டுமே சிந்திக்கின்றனர். அதிலும் குறைந்த சம்பளமும், அதிக வேலைப்பளுவும் சுமத்தப்படும்போது வேலை செய்பவர்களும் ஓர் சலிப்புத்தன்மையும், ஏன் தாம் இவர்களுக்கு கஸ்ட்டப்பட்டு வேலை செய்யவேண்டும் என்ற ஓர் மனோபாவன் தோன்றுவதுதான். அத்தோடு தானே எதிரில் ஓர் அலுவலகம் திறந்தால் தான் இன்னமும் அதிகமாக உழைக்க முடியும் என்பதும் கூட ஓர் காரணம்தான். அனுபவமற்ற அவர்கள் புதிய தொழிழ் தொடங்கும் போது வேலைக்கு அமர்த்துபவர்களைப் பிழிந்தெடுக்கவே அவர்கள் மனம் துடிக்கும். இவ்வாறே அவர்கள் தொழிற்சரிவு மீண்டும் பல்கிப் பெருகுகின்றதே ஒழிய வளர்வதாக தெரிவதில்லை. அத்தோடு, இங்கே சமத்துவமும் சகோதரத்துவமும் வளர்வது எப்படி? 

 

மதவாதம்

 

நான் முஸ்லிம், நான் இந்து, நான் கிறிஸ்தவன், நான் இந்த மதத்தவன், நான் இந்த சாதிக்காரன் என்று நாமே எம்மை வகைப்படுத்திக்கொண்டு நம்முள்ளேயே சண்டையிட்டுக்கொண்டுஇருக்கும் இவ்வேளை சீனர்களும் மற்றையவர்களும் நம்மை முந்திச் செல்கின்றனர், இதில் நாம் பொறாமைப்பட வேண்டிய தேவை இல்லை ஆனால் அவர்கள் போட்டியற்று தனி இராச்சியம் அமைத்து வருகின்றனர் என்பதுதான் உண்மை. நாமும் அவர்களுடன் போட்டி போடவேண்டும், சகோதர மன்ப்பாங்குடன் நாம் அவர்களை அணுகும்போது தொழில் இரகசியங்களையும் எம்முடன் பகிர்ந்துகொள்கின்றார்கள் என்பதுதான் உண்மை. தமிழர்கள் கோடி கொட்டிக்கேட்டாலும் சொல்ல மாட்டார்கள் என்பது நான் அனுபவ ரீதியாகக் கண்டு கொண்டது. இடப்படும் இந்த இடுகை என் தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

நிலவன் எழுதியவை | ஜனவரி22, 2009

நயனுக்கு கோயில்???

கால நீரோட்டத்தில் கரையுண்டு அள்ளுண்டு போகும் நிலையில் இருக்கும் ஓர் முக்கிய விடயமாக திகழ்வது ஆன்மீகம் மற்றும் கடவுள் பக்தி. சிறுவயது முதற்கொண்டு காலையில் எழுந்ததும் நான் குளியல் முடிந்ததும் ஓர் விசேட பணி காத்துக்கிடக்கும். பாடசாலைக்கு பூப்பறிப்பது. அதன்பின்னர் சுவாமியறைக்குள் நுழைந்தால் ஏற்றப்பட்டிருக்கும் விளக்கிற்கு அருகில் (மின்சார ஒளியில்லாத காலத்தில்) அதனைவிட பிரகாசமாக தினம் ஒரு காவடி முத்திரையிட்ட ஒரு கற்பூரம் ஏற்றி இளையராஜாவையும் ஏ.ஆர் ரகுமானையும் அழைத்து, குன்னக்குடி வயலினின் இழுபட்ட சுருதியில், எனக்கென்றே ஒரு ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி நாலஞ்சு தேவாரத்தை எடுத்துவிட்டுத்துத் தான் பின்னர் முக்கிய வேண்டுகோள்களையும் கருணை மடல்களையும், விண்ணப்பங்களையும் இறைவனிடத்தில் முன்வைப்பது. அதுவும் பரீட்சைக்காலத்தில் ஓர் முக்கியமான விடயம் முதல்நாள் வரை புத்தகமிருக்குமிடம் தெரியாது சுற்றியபின்னர் அதிகாலையில் எழுந்து அதனைத் தேடுவதும் தேடிப் புத்தகம் கிடைத்ததும் அன்று அதிகமாகவே ஆண்டவனுக்கு இலஞ்சம் கொடுப்பது போல 3,4 கூடுதலாகப் பாடப்படும், அதுவும் உயர் சுருதியில், அடுக்களையிலிருக்கும் அம்மா அப்போதுதான் நினைப்பா ” பொடி இண்டைக்கு பரீட்சை நல்லாப்படிச்சிட்டுது அதுதான் ஆண்டவனுக்கு விண்ணப்பம் வைக்க பக்கத்துவீட்டு கோமதி அக்காக்கு (அவாவிடம் தான் விஞ்ஞானம், கணிதம், மற்றும் பல பாடங்கள் படித்தது) கேக்குறமாதிரி பாடுது”. 

 

அந்தக்காலம் போய் பின்னர் மேற்படிப்பிற்காக இந்தியா சென்றேன்; கண்டதும் கேட்டதிலும் தலை சுற்றியது எனக்கு, எனது தெரிந்தவர் ஒருவர் அங்கு பிரயாண சேவை நடாத்துகின்றார். அவருடைய மகிழூர்ந்து ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி எனது மாமா இந்தியா வந்திருந்த வேளை தென்னிந்தியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். அப்போது அவ்வாகனச் சாரதியாக இருந்தவர் மதுரையைச் சேர்ந்த மாரிமுத்து என்னும் ஓர் அதி தெய்வபக்தி கொண்ட ஓர் அற்புத மனிதர், கள்ளம் கபடமற்ற அவருடைய உள்ளமும், அவருடைய நகைச்சுவையான பேச்சும், அதி வேகமாகவும் முழுக்கட்டுப்பாட்டுடனும் ஒருநாளைக்கு குறைந்தது 18 மணிநேரம் வாகனம் ஓட்டும் ஓர் உண்மையின் உழைப்பாளி. அவரைப்பற்றி மீண்டும் ஓர் இடுகை மிக விரைவில் இடுவேன். பிரயாண நேரத்தில் பாதிநேரம் எங்களுடன் வந்தவர்கள் துங்கினாலும் முன்னிருக்கையில் அவருடன் இருந்து உரையாற்றிக்கொண்டு வரும் எனக்கு அவரைப்பற்றி கேட்டதும் மனம் உடைந்துதான் போனேன். 

 

தன்னுடைய 16வது வயதில் தாய் தந்தையரைப்பிரிந்து நடிகை குஸ்பு மீது கொண்ட ஒருதலைப்பட்சமான காதலை நம்பி மதுரையிலிருந்து கைச்செலவு பணத்திற்காக ஊரில் ஓரிரவில் திருடிய ஒருமூடை அரிசியை விற்று அப்பணத்தில் சென்னை வந்தவர். அன்றிலிருந்து சாப்பாட்டிற்கு கஸ்டப்பட்டாலும், தங்க இடமின்றி கஸ்டப்பட்டாலும் மனதில் வேண்டிக்கொள்ளும் ஓர் இஸ்ட தெய்வமாக குஸ்புவின் புகைப்படம்(பத்திரிகைத்தாளில் இருந்து கிழித்தெடுத்தது) கும்பிட ஆரம்பித்தவர். இதைக்கேட்டதும் எனது மனம் உண்மையிலேயே ஏனோ அவர்மெல் இரக்கம் கொண்டு அவரிடமே கேட்டது “நீங்க இன்னமுமா குஸ்புவைக்காதலிக்கிறீங்க?” ” ஆமா, ஆனா இப்பவெல்லாம் கும்புடுறது இல்ல, அது தப்பு என்னு தெரிஞ்சுப்புட்டுது” குஸ்புவிற்காக கட்டப்பட்ட கோயிலுக்கு சென்றிருக்கின்றேன் என்று வேறு சொன்னார். அதன் பின்னர் அந்த சுற்றுலா முடித்து திரும்பியதும் அவருடைய சக சாரதிகளைச்சந்திக்கும்போது அவர்களும் கூட திரைப்பட நடிகைகள் மேல் கொண்ட ஒருதலைக்காதலால் அது நிறைவேறும் என நினைத்து ஊரை விட்டு கிளம்பியவர்கள் என்பதும் தெரிந்து வேதனைப்பட மட்டுமே என்னால் முடிந்தது. இன்று இவ்விடுகையை இட தூண்டியதும் ஓர் நடிகை மீதான காதல் காரணமாக கோயில் கட்டும் தமிழர்கள் இன்னமும் இருக்கின்றார்கள் என எண்ணும்போது மன வேதனை கூடுகின்றது. 

 

நயந்தாராவுக்கு கோயில் கட்ட முனைகின்றார்களாம், ஈழத்தில் நம் உறவுகள் உண்ண உணவின்றி, உடுக்க மாற்று உடையின்றி, தூங்க இடமின்றி, மருத்துவ வசதியின்றி பல்வேறு துன்பங்களுக்கு மத்தியிலும், தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சாகடிக்கப்படுகின்ற வேளையிலும், அத்துயரங்களுக்கு உதவ முன்வராத சிலர் ஒரு நடிகைக்கு கோயில்கட்டி கும்பிட தொடங்குகின்றார்கள் என்று கேள்விப்படும்போதே மனம் வேகுகின்றது. பகுத்தறிவைப் போதித்த பெரியார் வாழ்ந்த பூமியில், அதுவும் பெரியாரின் கொள்கைப்படி நடப்பவர்களும் இவ்விடயத்தில் தமது ஆதரவு நிலை கொண்டிருப்பது மனம் வேதனைப்பட்டது. திரையில் மட்டுமே பார்த்த நயந்தாரா என்னும் ஓர் நடிகையினை தெய்வ அந்தஸ்து கொடுத்து கொண்டாடுவது சரியா? இது தெய்வ வழிபாட்டை இழிவுபடுத்தும் செயலா? இல்லை மனிதநேயம் என்பதே மறந்தவர்களால் மட்டுமே சிந்திக்கப்படும் ஓர் விடயமா? ஒரே குழப்பம், இரவு தூங்க முடியவில்லை, பாதித்தூக்கத்தில் எழுந்து இவ்விடுகையை இடுகின்றேன். மிக விரைவில் ஓர் ஆக்கம் எழுத விரும்புகின்றேன் அதற்கு இதனைப்படிக்கும் தாங்கள் சரியானதோ பிழையானதோ மறுமொழிகளிட்டு என் சந்தேகக் குழப்பங்களை நீக்குவீர்கள் என நம்புகின்றேன்.

சர்வதேசமெங்கும் பரந்துவாழும் தமிழர்களே! இங்கே முத்திரையிடப்பட்டிருப்பவை சித்திரங்களல்ல, நம் ஈழ உறவுகளின் குருதி தோய்ந்த சிங்கள இனவெறியரசின் கோரப்பசிக்கு இரையான நம் உறவுகள். கொல்லப்பட்டிருக்கும் பச்சிழங்குழந்தைகளையும், நம் உறவுகளையும் பார்த்த பின்னரும் கூடவா தங்களுக்கு நெஞ்சில் ஈரம் வரவில்லை. சர்வதேசம் என்று கூறி வந்த அனுசரணையாளர்களே!, சமாதானம் என்று கூறிவந்த வல்லரசாளர்களே!, தமிழரைக் கொல்ல ஆயுதங்களை அள்ளி வழங்கி பெருந்தன்மை காட்டி, தங்களது வீரத்தினை ஓர் அப்பாவித் தமிழ் இனம் மீது ஒடுக்கிவிட்டிருக்கும் அறிவியலாளர்களே!, உங்கள் குண்டுகளினாலும், உங்கள் பீரங்கி வேட்டுக்களினாலும் கொல்லப்படுவது பச்சிளம் குழந்தைகள், நாளைய சந்ததியினர், நீங்கள் இன்று வாழ்ந்துவிட்டீர்கள், நாளை அச் சிறு பாலகர்களையாவது வாழ விடுங்கள், சிறுவயதிலேயே கைகளை இழந்து, கால்களை இழந்து கதறும் சத்தங்கள் இன்னமும் உங்கள் காதுகளில் ஒலிக்கவில்லையா? உங்கள் எல்லோருக்கும் மனித நேயம் என்பதே இல்லையா? தமிழர்கள் தங்கள் நிலத்தில் சுதந்திரமாக வாழ, சுதந்திரக் காற்றை சுவாசிக்க உரிமையில்லையா? தங்கள் உரிமையைக் கேட்டால் அது தீவிரவாதமா? கூறுங்கள் எங்களுக்கு அல்ல உங்கள் பிள்ளைகளுக்கு….. அவர்கள் சுகவீனமுற்று இருந்தாலும் இவ்வாறே நீங்கள் பாராமுகமாக இருப்பீர்களா? பதில் கூறுங்கள்… இன்னும் ஏன் அமைதி?

 

 

ஓ நாம் தமிழர் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதனாலா எல்லா உலக நாடுகளும் ஓரணியில் திரண்டுள்ளன???

வணக்கம்,

மதம், சாதி இதை வைத்தே தமிழன் தமிழனை அழிக்கும் காலமிது. ஆண்டவன் உன்னைப் படைக்கும்போது நீ இம்மதத்தவன், நீ இன்ன மொழியுடையவன் என்றா படைத்தான்? நாம் அனைவரும் தமிழர் என்னும் ஓர் தெரிந்த மொழியின் மூலம் உறவுகளாக இணைந்துள்ளோம். அதில் ஏன் மதம் ஒன்றை வைத்து பகை கொள்கின்றீர்கள். இதிலே இப்பதிவு ஏனோ ஒரு மதத்தினைச் சார்ந்ததாக இருந்தாலும் அதன் கீழே பலரும் பலவாறு இடுகைகளை இடுகின்றனர். இதிலே குறிப்பிடவேண்டிய ஓர் விடயம் மதம் மொழி சாதி இனம் என அனைத்து பாகுபாட்டினையும் மறந்து தமிழன் நாம் என்னும் ஓரணியில் ஒருமித்து குரல் ஒலித்தாலே நம் தமிழரை வெல்ல யாராலும் முடியாது என்பது என்னமோ உண்மைதான். அரசாண்ட இராஜராஜ சோழன் அன்று எவ்வாறு மலேசியா, இந்தோனேசியா ஏன் அவுஸ்ரேலியாவின் சில பகுதிகளைக்கூட தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்திருக்கின்றான். அதைவிட தமிழன் இல்லாத ஓர் துறையினை அதுவும் இன்றைய காலகட்டத்தில் தமிழன் இல்லாத ஓர் துறையினை தாங்கள் கூறுவீர்களானால் நாம் தமிழனில்லை என்று நான் தமிழ் ஆதரவை விலக்கிக்கொள்கின்றேன். வீதி கூட்டுவதிலிருந்து விளக்கேற்றுவதோடு மட்டும் நின்றுவிடாது தமிழன் வானிலும், கடலிலும் ஏன் அண்டவெளியிலும்கூட சாதனைகள் படைத்துக்கொண்டுதான் இருக்கின்றான் என்றால் அது மிகையல்ல. உண்மையில் நாம் ஒன்றினை எடுத்து நோக்குவோமானால் உலகிலேயே அதிக புத்திசாலிகள் என்று பன்னாட்டு அறிஞர்களால் பட்டியலிடப்பட்டவர்களில் முதலிடத்தில் ஏனோ யுதர்கள் இருந்தாலும் அடுத்த இடத்தில் தமிழர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் நாம் நம் இனம் இன்னமும் முன்னேற முடியாது தவித்திருப்பதற்கு ஓர் முக்கியகாரணம் யாதென்று கவனிப்போமாயின் அது நமக்கிடையே காணப்படும் ஒற்றுமையின்மைதான் என்பது என்னமோ உண்மைதானே?

யூதர்கள் புத்திசாலிகள் என்று குறிப்பிடப்படுமிடத்து நாம் ஒன்றை நோக்கவேண்டும், அவர்களை அழிக்கவென்றே பல நாடுகள் திட்டமிட்டு அவர்கள் மேல் இன்று நேற்றல்ல பல்லாண்டு காலமாக இன அழிப்பினை மேற்கொண்டுவந்தனர் ஏன் அதனை இன்றும்கூட தொடர்ந்தவண்ணம் உள்ளனர். அதேபோன்று அதற்கடுத்த நிலையிலிருக்கும் எம்மையும் அழிக்க திரைமறைவில் சதி நடக்கின்றது என்பது என்னமோ உண்மைதான் அதன் தோற்றுவாய்களாகவே ஒரு இனத்தின் அடையாளச் சின்னமான அவ்வினத்தின் மொழியில் வேற்றுமொழிக்கலப்பு இடம்பெறுகின்றது.

மொழியின் இறப்பு என்பதை நாம் எடுத்து நோக்குவோமாக இருப்போமானால் அது முக்கியமாக சில குறிப்பிட்ட காரணங்களால் இடம்பெறுகின்றன என்பது உண்மைதான் அதிலே முக்கியமாக வேற்று மொழிச் சொற்கலப்பு அத்துடன் நாகரீகமின்மை என்று கீழைத்தேய நாகரீகங்களைக்கொண்ட நாம் மேலைத்தேய நாகரீகங்களை நாடுவதும் அதன் வழி செல்கையில் எமக்கு அடுத்த சந்ததியினர் அவ்வழியில் தோன்றுவதும் இன்று நேற்றல்ல பல்லாண்டு காலமாக பல இனம் மொழிகளுக்கு எம்மவர்கள் மாற்றப்பட்டு நாம் மற்றைய மொழியினத்தவருக்கு அடிமையாக இருக்கின்றோம் என்பது எவ்வளவோ உண்மைதான். இன்று நம்மவர்களின் மூளைகள் அமெரிக்காவிலும் ஜப்பானிலும் ஏன் இன்னும் சொல்லப்போனால் பல்லாயிரம் மக்களிடையே நம்மவர்கள் அதாவது தமிழர்கள் தங்கள் அடிப்படை அடையாளங்களை இழந்து மாறிக்கொன்றிருக்கின்ற ஓர் கேவலமான நிலையில் நாம் இன்று இருந்துகொண்டிருக்கின்றோம் என்பது நாம் நம் கண்களால் காணக்கூடிய ஒன்று. இவற்றை மாற்றுவது யார்? எதனால் இம்மாற்றங்கள் என்று நாம் உற்றுநோக்குவோமானால் நாம் நம்மை திருத்திக்கொள்ள முடியும்.

ஆங்கிலவன் பண்பாடு என்று நாம் அடிமைப்பட்டுக்கொண்டாலும் அவன் மற்றையவரைப்பற்றி அதிகம் பேசுவதிற் செலவழிக்க மாட்டான். அவன் தான் தன் இனம் தன் இன கலாச்சார பண்பாட்டு வளர்ச்சி என்று அனைத்திலுமே தன் இனத்தை தக்க வைக்க எத்தனையோ வழிகளில் அதனை நம்மிடையேயும் புகுத்தியுள்ளான் என்பதுதான் உண்மை. நாம் எண்ணிப்பார்த்தோமானால் நாமே அவனிடம் அடிமையாகின்றோமே ஒழிய அவர்களல்ல. நம் நாட்டு சாப்பாட்டினை சாப்பிடும் வேற்று இனத்தவன் அவனது மொழியில் “மிக மிக அருமையான உணவு” என்று சொல்வான். அவன் நம் நாட்டிலிருக்கும்வரை அவ்வுணவை உண்பான் பின்னர் தெரியாததுபோன்று இருந்துவிடுவான் ஆனால் நம்மவர்களோ அவனது மேலைநாட்டு உணவினை நம்மிடங்களிலேயே கொட்டித்தீர்ப்பதும் அவனது கலாச்சாரமானா களியாட்ட விடுதிகளில் தூங்குவதும் ஏன் என்று நாம் யோசிக்கவேண்டும். அதைவிடுத்து மதம் மதம் சாதி என்று அனைவரும் ஒருவர் மேல் ஒருவர் குறைகூறுவதை விடுத்துவிட்டு பெரியார் சொன்னதுபோன்று நீங்கள் சிந்தியுங்கள் தமிழனுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே விடிவு நிச்சயம் என்பது உண்மை. நம்மவர்கள் நம் முன்னோர்கள் சிலர் நல்வழிகளை ஏற்படுத்தித் தந்துவிட்டுப்போனாலும் பலர் நம்மை அழிவுப்பாதைக்குள் நம்மைத்தள்ளிவிட்டுச் சென்றுவிட்டார்கள் என்பதே உண்மை அதன் வெளிப்பாடே இந்த சாதி என்னும் ஓர் கொடிய விசம். அதனை நாம் மீண்டும் மீண்டும் பருகப் பருக நமக்கே தீங்கு என்பதறியாது அதனுள் முக்குளிக்கின்றோம். மறவுங்கள் சாதியை, மறையுங்கள் உங்கள் மதத்தை, கூறுங்கள் உங்கள் மொழியை உரக்கவே “தமிழன்” பாரெங்கும் எதிரொலிக்க கதறுங்கள் கத்துங்கள் அதுவே நீங்கள் வாழாவிட்டாலும் உங்களுக்கு அடுத்த சந்ததி “தமிழன் ” என்னும் பெயரோடு ஓங்கி உலகெங்கும் ஒலிக்கும்போது தங்கள் குரலின் புகழ் உலகெங்கும் எதிரொலிக்கும். மீண்டும் ஒருமுறை கூறுவோம் நாம் மதம் மறைத்தவர்கள், சாதியை மறந்தவர்கள் ஆனால் பெரும்புகழ் கொண்ட வீரத் “தமிழன்”.

வகைகள்

Follow

Get every new post delivered to your Inbox.